Quotes from நிலமெல்லாம் ரத்தம்
எகிப்து, லெபனான், ஈராக் ஆகிய மூன்று தேசங்களும் முதல் முதலாக, பாலஸ்தீனிய அகதிகளைத் தமது மக்களுடன் கலந்து வாழ அனுமதிக்க முடியாது என்று அறிவித்தன. அதாவது அகதி நிலையிலேயே அவர்கள் முகாம்களில் தொடரலாம். ஏதாவது தீர்வு யோசித்து பின்னால் ஒரு வழி காணலாம் என்று இதற்கு அர்த்தம். சகோதர முஸ்லிம்கள்!
பா. ராகவன் (Pa. Raghavan) — 'நிலமெல்லாம் ரத்தம்'
கிருத்தவர்களால் கொல்லப்பட்டதாக மிஷாட் (Nafed Khaled Mishad) என்கிற சரித்திர ஆசிரியர் எழுதுகிறார். சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சி ஒருவரின் கூற்றை மேற்கோளாகக் கொண்டு எழுதும் மிஷாட், ‘கொல்லப்பட்டவர்களின் ரத்தம் உமர் மசூதியின் நுழைவு மண்டபத்தில் முழங்கால் ஆழத்தில் - குதிரைக் கடிவாளத்தை எட்டி நின்றது’ என்றும் குறிப்பிடுகிறார்.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'நிலமெல்லாம் ரத்தம்'
நீங்கள் போராடுங்கள். உங்களுக்குச் சுதந்தரம் வேண்டுமென்றால் நீங்கள்தான் போராடியாகவேண்டும். கடவுள் உதவமாட்டார்; உங்கள் பின்னால் வரவும் மாட்டார். சுதந்தரத்தைப் பொருத்த அளவில் போராட்டம் தான் கடவுள்
பா. ராகவன் (Pa. Raghavan) — 'நிலமெல்லாம் ரத்தம்'
மதம், அரசியல், உணர்ச்சி. சேரக்கூடாத இந்த மூன்று அம்சங்கள் ஒன்று சேர்ந்த காரணத்தால்தான் இன்றுவரை தீர்க்கப்படமுடியாத சிக்கலாக இது இருந்துவருகிறது.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'நிலமெல்லாம் ரத்தம்'