Quotes from குருதிப்புனல்

மரங்கள் பூதங்களாகி ஆடத் தொடங்கின’ தனிமையைக் கண்டு அஞ்சிய மனிதன் இயற்கைக்கு உயிரூட்டி துணை சேர்த்துக் கொண்டான், சுகம் தரும் கற்பனை. இரக்கமற்ற விஞ்ஞானம் மனிதனை இயற்கையினின்றும் பிரித்து, மனிதப் பரிணாம வளர்ச்சிக்கு சாத்திர பௌதிக நிர்ப்பந்தங்கள் ஏதுமில்லை என்கிறது.
இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy) — 'குருதிப்புனல்'
எந்தவிதமான துன்பம் ஏற்பட்டாலும், அத்துன்பத்தைப் போக்க முயலாமல், அந்தத் துன்பத்துக்குக் காரணம் கண்டுபிடித்துத் திருப்தி அடைந்துவிடுகிற மனப்பான்மை நம் இரத்தத்தில் ஊறிக் கிடக்கிறது. கஷ்டம் ஏற்பட்டாலும் அதனுடனும் சமரசம் செய்துகொண்டு எப்படிச் சிரிக்கவேண்டுமென்ற தவறான பாடங்களைப் போதித்துவரும் நம் கலாசாரம்!
இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy) — 'குருதிப்புனல்'
வெற்றி அடையும் பக்கம் சாய்வதோ, இல்லாவிட்டால், செய்கை என்று வரும்போது அலிகளாக இருந்து விடுவதோதான் இந்நாட்டு இன்டெலக்சுவல்களுடைய கொள்கைத் தர்மமாக இருந்து வந்திருக்கிறது
இந்திரா பார்த்தசாரதி (Indira Parthasarathy) — 'குருதிப்புனல்'