Quotes from புயலிலே ஒரு தோணி

கட்டுப்பாடில்லாத மனிதன் எவ்வளவு கொடிய விலங்கு!
ப. சிங்காரம் (P. Singaram) — 'புயலிலே ஒரு தோணி'
நாணயமா-பித்தலாட்டமா என்பது ‘தேவை’களின் நெருக்குதலைப் பொறுத்தே முடிவாகிறது. ஆகவேதான் ‘தேவை’களைக் குறைத்துக் கொள்ளும்படி ஞானியர் கூறிப்போந்தனர்... தேவையல்லாதவற்றை வாங்குபவன் தேவையானவற்றை-அதாவது வாய்மை, நேர்மை, மானம் போன்றவற்றை விற்க நேரும்... தேவைகளைக் குறைத்துக் கொண்டால் பலருக்குப் பல தொல்லைகள் நீங்கிவிடும்.
ப. சிங்காரம் (P. Singaram) — 'புயலிலே ஒரு தோணி'
நான் மூணாங்கணக்கு மைடானுக்கு வரச்சே, பிலவான்ல நாலுநாள் கப்பலைவிட்டு இறங்கக்கூடாதுன்னு சொல்லிப்பிட்டான்” சோறு நிறைந்த வாயுடன், ‘உப்புக் கண்டம்’ அண்ணாமலைப் பிள்ளை கூறினார். “அப்ப, மலாய் டாப்புல கால்ராவோ என்னமோன்னு சொன்னாங்ய, அது, ம்ம்...தொள்ளாயிரத்தி முப்பதோ முப்பத்தி ஒண்ணோ நினைப்பில்லை-கொப்பனாபட்டி நாவன்னா மூனா மார்க்கா நொடிச்ச வருசம்.
ப. சிங்காரம் (P. Singaram) — 'புயலிலே ஒரு தோணி'
மாதவர் நோன்பும் மடவார் கற்பும் காவலன் காவல் இன்றெனில் இன்றால்...
ப. சிங்காரம் (P. Singaram) — 'புயலிலே ஒரு தோணி'