Few Lines From The Story...
ஒவ்வொரு மெஷினாக மேற்பார்வை பார்த்துக் கொண்டே வந்தவள் தனது பி.ஏ வான சுதாவிடம் “எல்லாம் ஓகே வா சுதா”... இப்ப எந்த பிராப்ளமும் இல்லல்ல என்று கேட்க..
இல்ல மேடம் ஒரு பிராப்ளமும் இல்ல, எல்லாம் கரெக்டா இருக்கு செக் பண்ணியாச்சு என்று கூற.. ஓகே என்று கூறியவள், நேராக தனது அறைக்கு சென்றாள்.. அங்கிருந்த ஒவ்வொரு ராட்சச மிஷின்களின் இரைச்சலை கடந்து தனது அறைக்கு அவள் செல்லும்போது அனைவரது கவனமும் மெஷினில் இருந்தது…
அழகு சிலையாக அவள் நடந்து சென்ற போதும் யாரும் அவளை பார்க்கவில்லை, அவள் புறமே திரும்ப அஞ்சி மிஷினிலேயே இன்னும் கூடுதல் கவனத்துடன் வேலை செய்து கொண்டிருந்தனர்… அவளது பெயர் ட்சாயிதாட்சாயினி….. நேர்மையும் மென்மையும் கொண்ட அழகுச் சிலை அவள்… வேலையில் ஏதாவது கவனக்குறைவு நேர்ந்தால் அவர்களை லெப்ட் அண்ட் ரைட் வாங்கி விடுவாள்…
லாவண்டர் நிற லெகங்காவில் அழகு பதுமையாக அவள் உள்ளே வர.. அங்கிருந்தவர்களின் கண்கள் அவளை விட்டு அகல மறுத்தன… அவள் பேரழகு பெட்டகமாக ஜொலித்தாள்…
சுதா கூட யாரும் எங்கள கண்டுக்க மாட்டேங்கிறாங்க, எல்லாரும் உன்ன தான் பாக்குறாங்க என்று கிண்டலாக கூறினாள்… ஆனால் அதுதான் உண்மையும் கூட…
இந்த டிரஸ்ல நீ எவ்வளவு அழகா இருக்க தெரியுமா தாட்சாயினி என்று சுதாக் கூற…
தாட்சாயனியும் ஒரு மெல்லிய புன்னகையுடன் அவளுக்கு வாழ்த்துக்கள் கூறினாள்…
அங்கு பாட்டியில் அனைவரும் ஆரவாரத்துடனும் குதுகலகத்துடனும் பார்ட்டியை என்ஜாய் செய்து கொண்டிருந்தனர்… பொதுவாகவே அவளுக்கு இதுபோல் பார்ட்டிகள் பிடிப்பதில்லை, ஆனால் சுதா தனது நெருங்கிய தோழி என்பதால் வர வேண்டியதாக இருந்தது…
அப்பொழுது அங்கே அனைவரது கவனத்தையும் கவரும் வகையில் டக் டக் என்ற காலடி சத்தத்துடன் தனது ஆறடிக்கு அதிகமான உயரத்துடன் உள்ளே நுழைந்தான் ரவிவர்மா பாதுகாவலர்கள் புடை சூழ….
இவர் எவ்வளவு பெரிய பிசினஸ்மேன் தெரியுமா???? இவரை பார்க்கிறதுக்கு அப்பாயிண்ட்மென்டே கிடைக்காது… அப்படிப்பட்டவர் கதிரோட பங்க்ஷனுக்கு வந்திருக்கார்னா!!!!! உண்மையாவே கதிர் கொடுத்து வெச்சவங்க தான் என்று அங்கு ஒருவர் கூற….
அதற்கு இன்னொருவர், ஆமா இவருக்கு இல்லாத பிசினஸ்சே கிடையாதாம்… அவரோட காரே இவருக்காக தனியா டிசைன் பண்ணதாம் … இந்தியாவிலேயே ஒரு சிலர் கிட்ட தான் இந்த கார் இருக்காம் என்று இன்னொருவர் கூற….
அங்கிருந்த ஒரு பெண்ணோ ஆள பாரு எவ்வளவு ஹேண்ட்சம்மா இருக்காரு… மேன்லியா சும்மா கெத்தா இருக்காரு.. யாருக்கு கொடுத்து வச்சிருக்கோ??? நம்மளும் ட்ரை பண்ணலாம் என்று அங்கு இருந்த இளைய பட்டாளங்களில் ஒருவள் கூற…
அதற்கு இன்னொருவரோ, அவர் பக்கம் கூட நெருங்க முடியாது.. சுத்தி பார்த்தல்ல எவ்வளவு பாடி கார்ட்ஸ்ன்னு என்று கூற…
யாருக்குப்பா இவ்வளவு பில்டப் கொடுக்குறாங்க என்று திரும்பிப் பார்த்த தாட்சாயினிக்கு, அங்கு வந்து கொண்டிருந்த ரவிவர்மாவை பார்த்து அதிர்ச்சியாக இருந்தது…
இவனுக்கா இவ்வளவு பில்டப், பணத்தையும் ஆளையும் பார்த்து எல்லாம் மயங்கிடறாங்க. ஆனா??? குணத்தை பார்க்கிறதே இல்லை என்று நினைத்தவள் அலட்சியமாக முகத்தை திருப்பிக் கொண்டாள்….
ரவிவர்மா கதிருக்கு வாழ்த்து கூறினான்…
சார் நீங்க வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம்… பெரிய பெரிய ஆளுங்களோட பங்ஷன் கூட போகாம அவாய்ட் பண்ணுவீங்க, எனக்காக வந்தது எனக்கு ரொம்ப சந்தோஷம் சார் என்று நெகிழ்ச்சியுடன் கூற…
அவன் தோளில் தட்டியவன், நீ எனக்கு ரொம்ப இம்பார்ட்டன்டான பர்சன் கதிர்.. நீ இன்வைட் பண்ணி நான் வராம இருப்பேனா எல்லார விடவும் நீ எனக்கு ரொம்ப முக்கியம் என சிரித்துக்கொண்டே கூறினான்….
அங்கிருந்தவர்கள் அவனிடம் பேச முயற்சிக்க, அவன் அனைவரையும் கண்டுகொள்ளவில்லை..
பெண்கள் அவனிடம் வழிய வந்து மேலே விழுவது போல் பாசாங்கு செய்ய, அவனது பாடிகார்ட்ஸ் அவர்கள் அனைவரையும் ஒதுக்கி விட்டனர்…
இது எல்லாம் பார்த்த தாட்சாயிணிக்கு ரொம்ப ஓவரா தான் போறான் என்று நினைத்தவள்… பிறகு அவனை கண்டுகொள்ளாமல் சுதாவுக்கு சின்ன சின்ன உதவி செய்து கொண்டிருந்தாள்…
கதிரிடம் வாழ்த்து கூறிவிட்டு சென்றுவிடலாம் என்று இருந்த அவனது நினைப்பை பொடி பொடியா ஆக்கினாள், அங்கு அழகு பதுமையாக தாட்சாயிணி, இவனை அலட்சியமாக பார்த்துக் நின்று கொண்டிருப்பதை பார்த்தவுடன் அவனது எண்ணத்தை மாற்றிக் கொண்டான்…
அவனது கண்கள் அவளை தலை முதல் கால் வரை ஸ்கேன் செய்தது…. அவனது பார்வையை பொருட்படுத்தாமல் அவளை அங்குலம் அங்குலமாக அளவிட்டான் இதை அங்கிருந்தே அறிந்த தாட்சாயினிக்கு பற்றிக் கொண்டு வந்தது….