Quotes from ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்

வசனத்தை, இடம் பெற்றிருப்பவற்றின் கலை என்றும், கவிதையை, இடம் பெறாதவற்றின் கலை என்றும் சொல்லலாம்.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்'
கவிஞன் அல்லாத, கவிதை வாசகன் ஒருவனை, வெகுகாலமாகத் தேடிக் கொண்டிருக்கிறேன். கடைசியில் கிடைத்துவிட்டான் என்று என் மனம் துள்ளிய நேரங்களிலெல்லாம் ‘நானும் கவிதை எழுதியிருக்கிறேன்’ என்று அவன் தன் ஜேபிக்குள்ளிருந்து காகிதங்களை வெளியே இழுப்பான்.
சுந்தர ராமசாமி (Sundara Ramaswamy) — 'ந.பிச்சமூர்த்தியின் கலை: மரபும் மனிதநேயமும்'