Quotes from வெண்கடல்
அதில் ஒன்றில் வெந்துவிட்டதா என்று பார்க்க அம்மாவின் கை அழுந்திய பள்ளம் இருக்கும். அது என்னுடைய இட்லி. அதை நான் சின்னவயதில் இருந்தே அம்மையப்பம் என்று சொல்லி விசேஷ சலுகையாகத் தின்று வந்திருக்கிறேன். அந்த இட்லியைப் பிறர் தொடுவதுகூட எனக்கிழைக்கப்படும் மாபெரும் அநீதியாகவே எடுத்துக்கொள்வேன். அம்மா அந்தக் கைத்தடம் பதிந்த இட்லியை எடுத்து ஒரு அலுமினியத்தட்டில் போட்டு முந்தையநாள் மிஞ்சிய மீன்குழம்பில் கொஞ்சம் அள்ளி ஊற்றினாள். ‘குழிலே குழிலே’ என்று நான் அடம்பிடித்தேன். துளி சிந்தாமல் அந்தக்குழிக்குள் மீன்குழம்பு விடப்படவேண்டும்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'வெண்கடல்'