தாகங்கொண்ட மீனொன்று
Share:

தாகங்கொண்ட மீனொன்று

Thaagangonda Meenondru

Check Price on Amazon
4.31/5 · 49 ratings

தாகங்கொண்ட மீனொன்று

Thaagangonda Meenondru

4.31/5 · 49 ratings
பக்கங்கள்
200
வடிவம்
Hardcover
பதிப்பகம்
Last Resort
மொழி
தமிழ் (Tamil)
ISBN-13
9780955667466

பெருங்கடலால் மட்டுமே மீனின் தாகம் தணிக்கமுடியும். ஞானநிலையே அக்கடல். அதை நோக்கிய பயணத்திற்காக மீன் துடிக்கிறது.

ரூமியை மொழிபெயர்ப்புச் செய்வது என்பது உண்மையில் ஒரு தியானப்பயிற்சியே. இப்பயிற்சியின் வழியே ஒருவர் ஞானத்தின் ரகசியத் தோட்டத்திற்குள் நுழைகிறார். விசித்திரங்களை அறிந்து கொள்கிறார்.

சத்யமூர்த்தியும் அதையே செய்திருக்கிறார். அவருக்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்

  • எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன…
Interested in this book? Check Price on Amazon
Quotes

சரி தவறு என்பதற்கு அப்பாற்பட்டதொரு வெளி உண்டு. அங்கு சந்திப்பேன் உன்னை.

புல்வெளியின் மீது ஆன்மா கவிந்திருக்கும்போது எதையும் பேசவியலாதபடி ததும்புகிறது இப்பிரபஞ்சம்.

மொழி எண்ணம் ஏன் 'ஒருவருக்கொருவர்' எனும் பதம் கூட பொருளற்றுப் போகிறது அங்கே.

காதலின் வழி நுட்பமான விவாதமல்ல. பிரளயமே அங்கு செல்வதற்கான வாயில்.

தங்களது சுதந்திரத்தைப் பெருவானில் வட்டமிட்டு களிப்பெய்துகின்றன பறவைகள். அவை எப்படிப் பயில்கின்றன பறத்தலை?

அவை விழுகின்றன. அவ்வீழ்தலில் வழங்கப்படுகின்றன சிறகுகள்.

பகல் முழுக்க யோசித்திருப்பேன் அதைப்பற்றி.

இரவில் சொல்லிவிடுகிறேன் அதை.

எங்கிருந்து வந்தேன் நான்? எதைச் செய்யவேண்டும் நான்? பிடிபடவில்லை எனக்கு.

ஆனால் நானறிவேன் எனது ஆன்மா வந்தது வேறெங்கோ இருந்து அங்கு சென்றடையவே விரும்புகிறேன் நான்.

வேறேதோ மதுபான விடுதியிலிருந்து பிறந்திருக்கிறது இந்தப் போதை, நான் அங்கு மீளும்போது முற்றிலும் தெளிவடைந்திருப்பேன்.

இப்போது இந்த கூட்டில் அமர்ந்திருக்கும் நான் வேறோர் நிலவுலகின் பறவை.

நான் பறந்து வெளியேறும் நாள் வெகுதொலைவில் இல்லை.

ஆனால் எனது குரலுக்கு எனது காதினுள் செவிமடுப்பவர் யார்? எனது உதடுகள் வழி வருவது எவரது வார்த்தைகள்? எனது கண்கள் வழியே பார்ப்பவர் யார்? அந்த ஆன்மா எது?

கேட்காமலிருக்க முடியவில்லை என்னால்.

பதிலின் ஏதோ சிறுதுளி ருசிக்கக் கிடைத்தால் போதும் எனக்கு. போதையுற்றவர்களின் இந்தச் சிறையை உடைத்துக் கிளம்பிவிடுவேன். நானாக வரவில்லை இங்கு திரும்பிச் செல்வதற்குமில்லை அப்படியே. அழைத்து வந்தவரே என்னைத் திரும்ப இட்டுச் செல்லட்டும்.

இந்த கவிதை. என்ன சொல்லப்போகிறேன் என்று ஒருபோதும் எனக்குத் தெரியாது. திட்டமிட்டதுமில்லை.

அதைச் சொல்வதைத் தவிர்த்ததோர் வெளியில் சஞ்சரித்திருப்பேன் நான் மௌனமாக.

More Quotes...
Shelves
கவிதைகள் Poetry

More like this


தண்ணீர் தேசம்

இது கடலையும் அதன் பிரம்மாண்டத்தையும் மையமாகக் கொண்டு கவிதை நடையில் எழுதப்பட்ட ஒரு தனித்துவமான நாவலாகும். நீர்நிலைகள் மற்றும் கடல் பற்றிய பல்வேறு அறிவியல் உண்மைகளை எளிய …

4.22/5 · 1K+ ratings

அணிலாடும் முன்றில்

கூட்டுக் குடும்பங்கள் முற்றிலுமாகச் சிதைந்து வரும் இன்றைய நவீன காலத்தில், குடும்ப உறவுகளின் உன்னதத்தையும் அதன் ஆழமான பிணைப்பையும் உணர்வுப்பூர்வமாக விவரிக்கும் ஒரு வாழ்வியல் …

4.54/5 · 1K+ ratings

வேடிக்கைப் பார்ப்பவன்

தன் வரலாற்று நூல் வரிசையில் ஒரு மிக முக்கியமான இடத்தைப் பிடிக்கப்போகும் படைப்பு இது. சாதாரணமாக வேடிக்கை பார்ப்பது என்பது ஒரு பொழுதுபோக்கு அம்சமாகவே பலரால் கருதப்படுக…

4.57/5 · 1K+ ratings

பாரதியார் கவிதைகள்

மகாகவி பாரதியாரின் உணர்ச்சிமிக்க படைப்புகளைத் தொகுத்து வழங்கும் இந்த நூல், தமிழ் இலக்கிய உலகில் ஒரு மிகச்சிறந்த பொக்கிஷமாகும். விடுதலை வேட்கை, பெண் விடுதலை மற்றும் சமூக…

4.44/5 · 900+ ratings

பெய்யென பெயும் மழை

இந்த நூல் நவீனத் தமிழ் இலக்கிய உலகில் கவிப்பேரரசின் முத்திரை பதித்த ஒரு மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பாகும். இயற்கையின் எழில், மானுட உறவுகளின் ஆழம் மற்றும் சமூகச் சிந்தனைகளை…

4.11/5 · 500+ ratings

வில்லோடு வா நிலவே

கவிப்பேரரசரின் கைவண்ணத்தில் உருவான இந்த நாவல், காதலையும் வீரத்தையும் ஒருசேரப் பறைசாற்றும் உன்னதமான படைப்பாகும். வரலாற்றின் பின்னணியில் அழகிய தமிழ் நடையில் செதுக்கப்பட்டுள்ள…

4.0/5 · 400+ ratings

பட்டாம்பூச்சி விற்பவன்

இது ஒரு இளம் கவிஞனின் முதல் கவிதைத் தொகுப்பாகும். எளிய பேச்சு நடையில் அமைந்த இக்கவிதைகள் வாழ்க்கையின் சிறு சிறு நிகழ்வுகளை அழகாகவும் உணர்வுபூர்வமாகவும் சொல்கின்றன. கிர…

4.3/5 · 300+ ratings

இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல

காதலின் நுட்பமான நரம்புகளைத் தொட்டு, இயற்கையின் அழகை வார்த்தைகளால் வரைந்து, வாழ்க்கையின் ஆழமான உண்மைகளை எளிய சொற்களில் விதைக்கிறது இந்தக் கவிதைத் தொகுப்பு. "காதலித்துப்பா…

4.0/5 · 200+ ratings

தமிழுக்கு நிறம் உண்டு

Beautiful collection of Tamil poems from Vairamuthu. Some of the movie songs from Amarkalam, Poovellam un vasam are taken from this collection. Go…

3.98/5 · 200+ ratings

நா. முத்துக்குமார் கவிதைகள்

பிறந்தது 1975ல். காஞ்சிபுரம் அருகில் உள்ள கன்னிகாபுரம் சொந்த ஊர். காஞ்சி பச்சையப்பனில் இளங்கலை இயற்பியல் பட்டமும் சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை தமிழ் இலக்கியப் பட்டம…

4.09/5 · 100+ ratings

அ'னா ஆவன்னா

வாழ்வில் எதிர்கொள்கிற ஒவ்வொரு மறக்க முடியாத கதாபாத்திரமும், சம்பவமும் ஒரு படம்போல நம்மோடு தங்கிவிடுகின்றன. மனித உறவுகள் என்பதே கதாபாத்திரங்களுக்கு இடையிலான உறவுதானோ …

4.49/5 · 100+ ratings