Quotes from முகிலினி

எம்.டி நாமம் அணிவதில்லை என்பது ராஜுவுக்கு எப்போதுமே மகிழ்ச்சியளிக்கும். ராஜு பிடிவாதமான தி.மு.க காரன். தமிழ்கடவுள் முருகனைத்தவிர வேறெந்த கடவுளின் பக்கமும் திரும்பிக்கூடப் பார்க்கமாட்டான். தி.க.விலிலிருந்து தி.மு.க பிரிந்தபோது ‘மு’ என்பதை முருகன் என்று ராஜு புரிந்துகொண்டதாக நண்பர்கள் கிண்டல் செய்வார்கள்.
இரா. முருகவேள் (Ra. Murugavel) — 'முகிலினி'