Quotes from புறப்பாடு
இன்னொருவனை ஏமாற்றுவது தான் அயோக்கியத்தனம். தன்னைத்தானே திறமையாக ஏமாற்றுவது முட்டாள்தனம் மட்டும்தான்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'புறப்பாடு'
சிவகுருநாத பிள்ளை மேலே சர்ச்சை செய்யவில்லை. நான் எழுதிய ’சைவ சூடாமணி’ நூலில் அரிஸ்டாட்டில் மேற்கோள் இருந்ததைச் சுட்டிக்காட்டி “இது எப்டி சைவத்திலே?” என்று ஒருநாள் கேட்டார். “உலகம் முழுக்க இருக்கிற எல்லா ஞானமும் சைவம்தானே?” என்றேன்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'புறப்பாடு'
ஏன்?” என்றேன். “எவன் படிக்கிறான்? படிச்சாலும் அந்த மருந்த செஞ்சிர முடியுமா? வலமாப்போற வேம்போட வேரும் வெட்டிவேர் குருத்தும் மூத்த களுகு முட்டையோடே நலமா அரைச்சு நாற்களஞ்சு வேம்பெண்ணை நாலில் ஒண்ணாக்கிண்ணூ சும்மா அடிச்சி உட்டா எவனால அதையெல்லாம் போட்டு மருந்தரைக்க முடியும்? பேசாம உள்ளூர் மாட்டாசுபத்திரியிலே போனா அவன் ஊசியக்கீசிய போட்டு மாட்ட காப்பாத்துறான்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'புறப்பாடு'
விரஜர்களுக்கெல்லாம் அல்லா எடத்திலயும் சோறு கிருஷ்ணா. எவ்ளோ மடம் இருக்கு... அன்னபூரணன் கல்யாணன் கிருஷ்ணன் இருக்கானே கிருஷ்ணா.” இன்னொருவர் “சோறு இல்லாட்டி என்ன கிருஷ்ணா? ராம நாமமே பாயசம். கிருஷ்ணநாமமே சக்கரை...” அவர் கையைத் தட்டியபடி எழுந்து ஆடியபடி பாடினார்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'புறப்பாடு'
இருக்கணும்?
ஜெயமோகன் (Jeyamohan) — 'புறப்பாடு'
தட்டுலே பாயசம் வெச்சு சாப்பிடு கிருஷ்ணா. தட்டு இல்லேண்ணா பாயசம் ஓடிரும். பாயசமில்லாத வெறும் தட்டு உதவாது...” கிழவரைச் சுட்டிக்காட்டி “குரு சொல்வார். தட்டைத் திங்காதே. தட்டைப்பழிக்கவும் செய்யாதே... கிருஷ்ணமதுரம் வெள்ளித்தட்டிலேதானே இருக்கணும்?
ஜெயமோகன் (Jeyamohan) — 'புறப்பாடு'