Quotes from என் கண்மணி தாமரை
என்ன இருக்கிறதோ அதை மட்டும் ஏற்க வேண்டும் . என்ன இல்லையோ அதை மறக்க வேண்டும் . கிடைத்ததைக் கொண்டாட வேண்டும் . விதித்ததை அனுபவிக்க வேண்டும் . இனித்தாலும் , கசந்தாலும் நீயே என்று பிரபஞ்ச சக்தியை பற்றிக் கொள்ள வேண்டும் . அந்த சக்தியோடு மனம் லயித்துக் கிடக்க வேண்டும் .
பாலகுமாரன் (Balakumaran) — 'என் கண்மணி தாமரை'
இல்லறத்தைத் துறப்பது துறவல்ல. அகந்தையைத் துறப்பதே துறவு. மற்றதெல்லாம் வெளிவேஷங்கள்
பாலகுமாரன் (Balakumaran) — 'என் கண்மணி தாமரை'
அவன் செத்தால் தடுக்க உம்மால் ஆகுமா? உமது மரணத்தை நீர் கவனித்துக் கொள்ளும். அவன் மரணத்தை அவன் பார்த்துக் கொள்வான்.'' ராஜம் அதட்டினாள்.
பாலகுமாரன் (Balakumaran) — 'என் கண்மணி தாமரை'
கடவுள் என்பது அறிவல்ல. அதுவொரு அனுபவம். அது படிப்பறிவல்ல. பட்டறிவு. அது அறிந்து கொள்வதல்ல. கேட்டுத் தெரிந்து கொள்வதல்ல. அது உணரப்படுவது.
பாலகுமாரன் (Balakumaran) — 'என் கண்மணி தாமரை'
பேசும் பாஷையில் இறைவனைத் துதிப்பது எத்தனை சுகம். வடமொழியில் யாரும் பேசுவதில்லை. ஆனால், வடமொழி அறிந்தவர்கள் தமிழில் பேச மட்டுமே உபயோகப் படுத்துகிறார்கள்.
பாலகுமாரன் (Balakumaran) — 'என் கண்மணி தாமரை'