Quotes from இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்

இன்பத்தை அடைவதே வாழ்வின் இலக்கு. மரணத்துடன் வாழ்வு முடிந்து போகிறது. மண்ணில் வாழும் சிறந்த வாழ்வே மோட்சமாகும்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்'
ஐம்புலன்களும் மனமும் செயலற்றிருக்க, அறிவு நிலைத்து நிற்கும் நிலையே யோகம்
ஜெயமோகன் (Jeyamohan) — 'இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்'
அனைத்திற்கும் காரணம் உண்டு என்றால் அந்த ஆதி இயற்கையின் காரணம் என்ன? அதை சாங்கியம் இப்படி விளக்குகிறது. ‘அமூலம் மூலம்’ (வேருக்கு வேர் இல்லை) /
ஜெயமோகன் (Jeyamohan) — 'இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்'
அபாவம் (இன்மை) என்பதும் ஒரு பொருண்மை இருப்புதான் என்று நியாய சாஸ்திரம் கருதுகிறது. அதாவது, ஒரு பொருள் இல்லாமலிருப்பதும் ஒருவகை இருப்பே.
ஜெயமோகன் (Jeyamohan) — 'இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்'
அதாவது, சிந்தனை என்பது சுவாசமென்றால் தத்துவச் சிந்தனை என்பது பிராணாயாமம்.
ஜெயமோகன் (Jeyamohan) — 'இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்'
தத்துவம் வெறும் தர்க்கங்களாக முன் வைக்கும் சிந்தனைகளை நடைமுறைத் தளத்துக்கு விரிவுபடுத்திக்கொள்ள நமக்கு முடியுமென்றால், தத்துவம் மிகமிக ஆர்வமூட்டும் துறையாக ஆகிவிடும். நமது
ஜெயமோகன் (Jeyamohan) — 'இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்'