Quotes from சிதம்பர ரகசியம்

அசைவே வாழ்வு; அதை தவிர்த்தால் - தவம்! வாழ்வு என் நாட்டியம்; தவம் என் லிங்கம்!!
Indra Soundar Rajan (Indra Soundar Rajan) — 'சிதம்பர ரகசியம்'
மனுஷ வாழ்க்கையில எவ்வளவு பெரிய விஷயமா இருந்தாலும்… முதல் தடவை மட்டும்தான் பெருசா தெரியும்.
Indra Soundar Rajan (Indra Soundar Rajan) — 'சிதம்பர ரகசியம்'
மதுரை அமிர்தம்னா மதுரை நகரம் அமிர்தம்பட்ட ஊர். அமிர்தத்துக்கு அழிவு கிடையாது, அழியாதது கலைகள்… அந்தக் கலைகள் கொண்ட ஊருன்னு பொருள் கொள்ளலாம்.
Indra Soundar Rajan (Indra Soundar Rajan) — 'சிதம்பர ரகசியம்'
வயித்தைக் கழுவறதுக்காக வாழ்ந்தா எல்லாமே புதுசாதான் தெரியும். பசியை ஜெயிக்க வாழ்ந்து பாரு. நம்மளைச் சுத்தி எவ்வளவு அதிசயமும், ரகசியமும் இருக்குன்னு புரியும்…
Indra Soundar Rajan (Indra Soundar Rajan) — 'சிதம்பர ரகசியம்'
சலிப்புணர்வு ஒரு கரையான்! துளி அளவு அது வந்தால் போதும். மொத்தத்தையும் அரித்துவிடும்.
Indra Soundar Rajan (Indra Soundar Rajan) — 'சிதம்பர ரகசியம்'
இந்த உலகத்துல ஒண்ணை இழந்தாதான் ஒண்ணு கிடைக்கும். இழக்கறதுக்கு சமமாதான் கிடைக்கறதும் இருக்கும்…
Indra Soundar Rajan (Indra Soundar Rajan) — 'சிதம்பர ரகசியம்'