Quotes from பிரபாகரன் வாழ்வும் மரணமும்

ஒருமுறை, யார் உங்களுக்கு நெருங்கிய நண்பர் என்று ஒரு பத்திரிகையாளர் பிரபாகரனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில்: இயற்கை என் தோழன். வாழ்க்கை என் தத்துவ ஆசிரியர். வரலாறு என் வழிகாட்டி.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'பிரபாகரன் வாழ்வும் மரணமும்'
எந்தவித அச்சுறுத்தல்களுக்கும் அடங்க மறுத்து சிலிர்த்து எழுந்த அத்தனை பேரையும் அவனுக்குப் பிடித்தது. என் மண்ணில், என் விருப்பப்படி அலைந்து திரியவும் வாழ்ந்து மகிழவும் இன்னொருவன் எப்படித் தடைபோடலாம்?
பா. ராகவன் (Pa. Raghavan) — 'பிரபாகரன் வாழ்வும் மரணமும்'
வெங்கிட்டு, சமையலை எளிதாக நினைக்காதே. ஒரு போராளிக்குச் சமைக்கத் தெரியவேண்டியது மிகவும் அவசியம். வேளைக்குச் சாப்பிடவேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்துச் சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம்.
பா. ராகவன் (Pa. Raghavan) — 'பிரபாகரன் வாழ்வும் மரணமும்'
நாமே சமைத்து சாப்பிட்டால்தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம்
பா. ராகவன் (Pa. Raghavan) — 'பிரபாகரன் வாழ்வும் மரணமும்'