Quotes from அப்பா என்னும் வில்லன்
அட இதைத்தானே கண்ணதாசன் கையளவு கிடைத்தாலும் கலங்க மாட்டேன். அது கடலளவே ஆனாலும் மயங்க மாட்டேன். உள்ளத்திலே உள்ளதுதான் உலகம் கண்ணா! இதை உணர்ந்து கொண்டால் துன்பம் எல்லாம் விலகும் கண்ணா'ன்னு சொல்லியிருக்கார்
பாரதி பாஸ்கர் (Bharathi Baskar) — 'அப்பா என்னும் வில்லன்'
மெய்த்திருப்பதம் மேவு' 'நாளையிலிருந்து நீ ராஜா' என்று சொன்ன போதும் சரி, 'இத்திருத்துறந்து ஏக' - இந்த நிமிஷத்திலிருந்து காட்டுக்குப் போ' என்ற போதும் சரி, இராமனின் முகம் சித்திரத்தில் வரைந்த தாமரைப் பூப்போல மலர்ந்தே இருந்ததாம்.
பாரதி பாஸ்கர் (Bharathi Baskar) — 'அப்பா என்னும் வில்லன்'
காதலோ, கல்யாணமோ, பிரண்ட்ஷிப்போ எல்லாத்தோட டைமென்ஷனும் மாறிட்டே இருக்கு ஒரு சமயத்தில் ரொம்ப முக்கியமா தெரியறது மற்றொரு சமயத்தில் அவ்வளவு பெரிசா, முக்கியமா தெரியாது. டேக் இட் ஈஸி
பாரதி பாஸ்கர் (Bharathi Baskar) — 'அப்பா என்னும் வில்லன்'
பிள்ளை மனசு சப்பாத்தி மாவு மாதிரி. அதிலே வெறுப்பைப் பிசையறது ரொம்பச் சுலபம்.
பாரதி பாஸ்கர் (Bharathi Baskar) — 'அப்பா என்னும் வில்லன்'
சுதத்திரம் வேண்டும்போது அதிகப் பொறுப்புகளையும் அதிக வலிகளையும் சுமக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டால் போராட சக்தி கிடைக்கும்.
பாரதி பாஸ்கர் (Bharathi Baskar) — 'அப்பா என்னும் வில்லன்'
எல்லாரும் பிள்ளைங்க பணம் சம்பாதிக்கணும்னு நினைக்கறாங்களே தவிர, மனசிலேயும் வெளியேயும் வெறி இல்லாம அமைதியோட இருக்கணும்னு நினைக்கறதில்லை.
பாரதி பாஸ்கர் (Bharathi Baskar) — 'அப்பா என்னும் வில்லன்'
இன்றைய தேதியில் இளைஞர்கள் கிட்டே வெறி இருக்குன்னா அதுக்குக் காரணம் அவங்க இலக்கியத்தாலும் ஆன்மிகத்தாலும் பண்படுத்தப்படாத ஒரு தலைமுறை.
பாரதி பாஸ்கர் (Bharathi Baskar) — 'அப்பா என்னும் வில்லன்'
மனிதர் நோக மனிதர் பார்க்கும் வாழ்க்கை இனியுண்டோ'ன்னு
பாரதி பாஸ்கர் (Bharathi Baskar) — 'அப்பா என்னும் வில்லன்'
இந்தப் பெருமை மிக்க விருதை வாங்க உங்களோடு 49 பேர் போட்டி போட்டார்கள். அவர்களிடம் இல்லாதது, உங்களிடம் இருப்பது என்ன?" "என் அப்பா.
பாரதி பாஸ்கர் (Bharathi Baskar) — 'அப்பா என்னும் வில்லன்'