Quotes from செம்மாரி
கொடுக்க, கொடுக்க அதிகரிக்கும் உன் அறிவு, வடிகெட்டாமல் கொடு! உலகத்திலிருந்து நீ விடுபட்டாலும், இருக்கவேண்டும், நீ விட்ட வடு!
சமுர (Samura) — 'செம்மாரி'
சிரமுடி கருப்பாக இருந்தால்தான் இளமை; கருவிழி கருப்பாக இருந்தால்தான் பார்வை; கருப்பு மேகம், வந்தால்தான் வளமை; இருட்டு, தினமும் வந்தால்தான் வாழ்க்கை!
சமுர (Samura) — 'செம்மாரி'
வெள்ளை மனதுடன் இருப்பதே மேல், ‘இல்லை’ என்ற மனசுக்காரன், இறப்பதே மேல்; வெள்ளைத்தாளிலே, எழுத்தாளரின் கலை எழுத்து தொடங்கும், வெற்றுத்தாளிலே கையெழுத்திட்டவரின், தலை எழுத்து முடங்கும்!
சமுர (Samura) — 'செம்மாரி'
தனக்குப்பின் ஒருவன் தலை தூக்குவான் என, தன் தலையைப்பற்றி அஞ்சாமல், முன்னின்று போராடுபவனே தலைவன்; முதிர்ந்த தலைவன், உதிர்ந்து போகவும் தயங்கமாட்டான், முளைத்த தலைமுறையை முன்னுக்கு கொண்டுபோக!
சமுர (Samura) — 'செம்மாரி'
மோசமான சினத்தை ஆதரித்தால், அவமானச்சின்னமே, அவதரிக்கும்; கனப்பொழுது, கோபத்தை கட்டுப்படுத்தினால், தினப்பொழுதும், வாழ்வில் துன்பமில்லை!
சமுர (Samura) — 'செம்மாரி'
இங்கு பெரியோன், சிறியோன் இல்லை, இங்கு கல்லோன், இல்லோனே உண்டு; தெரிந்ததை, பத்து பேருக்கு சொல்லிக்கொடு, இருப்பதை, அற்ற பேருக்கு அள்ளிக்கொடு!
சமுர (Samura) — 'செம்மாரி'
தாவரத்திற்கும், உயிர் உண்டு, தாவும் இனத்திற்கும், உணர்வு உண்டு; தான் உண்டு, என இருப்பதை, நாம் உண்டு வாழ, அழிக்காதே!
சமுர (Samura) — 'செம்மாரி'
சாதித்தவனை, சாதி பாராமல் பாராட்டு; நிறவேத்தியவனை, நிறம் பாராமல் பாராட்டு; இணக்கமாக இருப்பவனை, இனம் பாராமல் பாராட்டு; சமயத்தில் முடித்தவனை, சமயம் பாராமல் பாராட்டு!
சமுர (Samura) — 'செம்மாரி'
வேண்டும் என்று, இருக்கும் அறியாதவனுக்கு, புரியவைப்பதை விட, வேண்டுமென்றே இருக்கும் அறிந்தவனுக்கு, புரியவைப்பது கடினம்; நமக்கு தெரிந்தவனிடம் சண்டைபோட்டு விளையாடுதைவிட, நமக்கு தெரியாதவனிடம் விளையாட்டாய் சண்டையிடுவது ஆபத்து!
சமுர (Samura) — 'செம்மாரி'