Quotes from அதிகாரம் அமைதி சுதந்திரம்
பிணங்களிலிருந்து தனது உணவை எடுத்துக் கொள்ளும் கழுகுகளைப் போல இலங்கையில் விழும் தமிழ்ப் பிணங்களிலிருந்து தங்களுக்கு எத்தனை பாராளுமன்ற சீட்டுகள் கிடைக்கும் என்று கணக்கிட்டுக் கொண்டிருக்கின்றன தமிழ்நாட்டின் இரண்டு அரசியல் கழுகுகள். இலங்கைத் தமிழருக்காக கருணாநிதி விடும் கண்ணீர் அத்தனையும் வெறும் கபட நாடகம் என்பதை மக்கள் புரிந்துகொண்டு விட்டனர்.
சாரு நிவேதிதா (Charu Nivedita) — 'அதிகாரம் அமைதி சுதந்திரம்'
ஹிட்லரின் வதைமுகாம்களுக்கு யூதர்களை லாரிகளில் அள்ளிப் போட்டுக் கொண்டு போவார்கள். அதைவிடக் கொடுமையானது இந்தியாவின் மாநகர பஸ் மற்றும் ரயில் போக்குவரத்து.
சாரு நிவேதிதா (Charu Nivedita) — 'அதிகாரம் அமைதி சுதந்திரம்'
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு அரசியல் கட்சி இந்தியாவைக் குத்தகைக்கு எடுத்துக்கொண்டு, மக்கள் பணத்தை அந்தக் கட்சிக்காரர்கள் சூறையாடுவார்கள். பிறகு, அடுத்த தேர்தலில் இதுவரை எதிர்க்கட்சியாக இருந்த கட்சி ஆட்சிக்கு வந்து அந்தக் கட்சியின் ஆட்கள் மக்கள் பணத்தைக் கொள்ளையடிப்பார்கள்.
சாரு நிவேதிதா (Charu Nivedita) — 'அதிகாரம் அமைதி சுதந்திரம்'