கி.பி 1018 - 26 ஆண்டுகளில் பாரத வர்ஷத்தின் அரசியல் நிலையை மையமாகக் கொண்ட இப்புதினத்திற்கு வித்திட்டது. ராஜேந்திர சோழரின் கங்கை கொண்ட வெற்றி குறித்து அமைந்த நாவல். உத்தராபதம் எனப்பட்ட பாரத வர்ஷத்தின் வடபகுதியில், கி.பி. 998 முதல் 1030 வரை கோலோச்சி, தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு, தனது வஜ்ர சரீரத்தில் எழுபத்து இரண்டு விழுப்புண்கள் தாங்கிய மன்னவரையும், பூர்வதே…
கி.பி 1018 - 26 ஆண்டுகளில் பாரத வர்ஷத்தின் அரசியல் நிலையை மையமாகக் கொண்ட இப்புதினத்திற்கு வித்திட்டது. ராஜேந்திர சோழரின் கங்கை கொண்ட வெற்றி குறித்து அமைந்த நாவல். உத்தராபதம் எனப்பட்ட பாரத வர்ஷத்தின் வடபகுதியில், கி.பி. 998 முதல் 1030 வரை கோலோச்சி, தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு, தனது வஜ்ர சரீரத்தில் எழுபத்து இரண்டு விழுப்புண்கள் தாங்கிய மன்னவரையும், பூர்வதேசம் என்றழைக்கப்பட்ட பாரத வர்ஷத்தின் கிழக்குப்பகுதியில் இருந்த பால சாம்ராஜ்யத்தை இரண்டாம் முறை நிறுவியவர் என்று வரலாற்றாசிரியர்களால் புகழப்பட்ட மன்னரையும், சுவர்ணபூமியில் பெரும் வலிமை கொண்டு, வணிக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜயத்தையும் ராஜேந்திர சோழர் வென்றமை குறித்து இயல்பான நடையில் அமைந்த புதினம்.
சரித்திரப் புதின வாசகர்கள் பலரை உருவாக்கிய பெருமையுடைத்த “பொன்னியின் செல்வன்” நம்மையும் தன்பால் ஈர்த்துக்கொண்டமையால், சக வாசகனான நாம், சரித்திரப் புதின வாசகப் பெருமக்களை இப்புதினம் மூலமாய் சந்திக்கும் அரும் வாய்ப்பையும் பெற்றோம்.
பெருமகனார் கல்கி அவர்களின் விவரிப்பில் விளங்கிற்று, தனக்குரிய அரியணையை சிறிய தந்தைக்கு அளித்த “தியாக சிகரம்” அருமொழிவர்மனான ராஜராஜரின் உன்னதம்.
ஆயிரக்கணக்கான மரணங்களை நிகழ்த்தியேனும் கைப்பற்றத் துடிக்கும், சகல போகங்களும் கிட்டும் ராஜ பதவியை ஒருவர் விட்டுத்தருவது சாத்தியமா? எனும் வினவலும் உடன் எழத்தான் செய்தது. “சோழர்கள்” - திரு.K.V.ராமன் என்பாரால் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட K.A.நீலகண்ட சாஸ்திரியாரின் “THE COLAS” எனும் நூல், சரித்திரச்சான்றுகளோடு “அறத்திலும் மறத்திலும் ராஜ்ய பரிபாலனத்திலும் மிகச்சிறந்தவர்” என்று விவரித்து “RAJARAJA THE GREAT” என்றுரைத்து உறுதியும் செய்யலாயிற்று.
இந்திய வரலாற்று ஏடுகளில் பொன்னால் பொறிக்கப்பட்ட மன்னர்கள் பலருள் ஒருவரான ராஜராஜருக்கு மகனாகப் பிறந்தால்?.
“இவன் தந்தை எந்நோற்றான்” எனும் மொழிக்கு உதாரணமாகத் திகழ வேண்டிய கட்டாயம் இருந்தது, ராஜராஜரின் புதல்வரான ராஜேந்திரசோழருக்கு (1012-44) என்றே வரலாற்றுப் பேராசிரியர்கள் பலரும் கருதுகின்றனர்.
அதற்கு ஆதாரமாக, “உடையார் ஸ்ரீராஜேந்திர சோழ தேவர் உத்தராபதத்தில் பூபதியரை ஜயித்தருளி யுத்தோத்சவ விபவத்தால் கங்காப் பரிக்கிரகம் பண்ணியருளின கங்கை கொண்ட சோழனென்னுந் திருநாமத்தால் இத்திருமுற்றத்தில் வைத்தருளின உத்தமாக்ரகம் கங்கை கொண்ட சோழனில்…” (திரு.சதாசிவ பண்டாரத்தாரின் “பிற்காலச் சோழர் சரித்திரம்” எனும் நூலின் பக்கம் 126லிருந்து) விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள எண்ணாயிரம் எனும் ஊரில் கிடைக்கப்பெற்ற சாசனமானது, அவர் காலத்திற்கு முன்னர் தமிழகத்தின் மன்னர்கள் எவரும் செய்திராத உத்தராபதத்திற்குப் படையெடுத்துச் சென்று மன்னர்களை வென்று கங்கை கொண்டான் என்றும், பாரதவர்ஷத்திற்கு அப்பால் இருந்த சுவர்ணபூமியின் அரசுகள் பலவற்றையும் வென்று கடாரம் கொண்டான் என்றும், “பூர்வதேசமும் கங்கையும் கடாரமும் கொண்டான்” என்றும் விருதுப்பெயர்கள் தாங்கியமை குறித்து விவரிக்கும் சாசனங்கள் திகழ்கின்றன.
சரித்திரத்தின் பல பகுதிகள் இன்னும் தெளிவடையவில்லை என்றே அறிஞர்கள் பலரும் உரைக்கின்றனர். சில பகுதிகள் மட்டுமே சாசனங்கள் மூலமாகவும் பாக்களாகவும் வம்சாவளிச்சரிதைகளாகவும் கிட்டியிருக்கின்றன. அவ்வண்ணம் கிட்டியவை குறித்தும் வரலாற்று ஆய்வாளர்களிடையே வேறுபட்ட கருத்துகளும் நிலவுகின்றன.
அந்த வேறுபட்ட கருத்துகள் அடங்கிய பகுதிகளில் ராஜேந்திர சோழரின் காலமும் அடங்கும். ராஜேந்திரரின் ஆட்சிக்காலத்திற்குட்பட்ட கி.பி.1021-26, நாம் இப்புதினத்திற்கென எடுத்துக்கொண்ட காலகட்டமும் அதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் அறிஞர்களின் குறிப்புகளிலிருந்து அறிய நேர்கிறது.
நாம் இப்புதினத்தை ஆக்க விழைந்தபோது, பெரும்பாலான ஆய்வாளர்களின் குறிப்புகளை ஒட்டியே துவங்கினோம். பின்னாட்களில் அவர்களது குறிப்புகளிலிருந்தும் கணிப்புகளிலிருந்தும் விலகவும், பாரதவர்ஷத்தின் பழம் புவியமைவைக் குறித்தும் நாம் தேட வேண்டிய நிர்ப்பந்தமும் ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தி வரிகளால் நேர்ந்தது. அம்மெய்க்கீர்த்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நாடுகள் சிலவற்றைக் குறித்து ஆய்வாளர்களிடையே ஒருமித்த கருத்து இல்லாமையே அதற்கு காரணமாயிற்று.
தொழில்நுட்பப் பயிற்சி பெற்றிருந்தமையால் கிட்டிய ஆயும் திறன்கொண்டு நாம் அலசிய புவியமைவைக் குறித்த நூல்களிருந்து நாம் பெற்ற சில குறிப்புகளையும், பாரத வர்ஷத்தின் சரித்திரத்தில் முக்யத்துவம் பெற்றுள்ள கி.பி.1025-26ல் நடந்த ஓர் போரையும் கவனத்தில் கொண்டு நாம் தீட்டியதே இப்புதினமாகும்.
அவரவர்க்குரித்தான பணியைச் செய்வதே பெரும்பாடாயிருக்க, இவ்வெழுத்துப்பணியை நாம் புரிவதற்கும், நமது புதினத்தின் வளர்ச்சிக்கு பெரும் துணையாயும், தேவையான ஆலோசனைகள் தந்தும், பதிப்பிப்பதற்கு ஏதுவாக பல அம்சங்களைச் சேர்த்தும் உதவிய “சரித்திரப் புதினச் சேகரிப்பாளாரான” திரு. சுந்தர் கிருஷ்ணன் அவர்கட்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம்.
பொன்னியின்செல்வன் மற்றும் அகத்தியர் என இரு யாஹூ மடற்குழுமத்தாரின் பதிவுகள் நமக்குப் பேருதவியாயிருந்தன. அம்மடற்குழுக்களை அலங்கரிக்கும் அங்கத்தினர்க்கும்,
நாம் இப்புதினத்தை இயற்றவிருப்பதாகச் சொன்ன போது, ஊக்கம் தந்தும், ராஜேந்திரரின் சரித்திரத்தில் உள்ள ஐயப்பாடுகளையும் விவரித்துதவிய சிற்பக்கலை ஆராய்ச்சியாளரான “Poetryinstone” விஜய்குமார் அவர்களுக்கும்,
ராஜேந்திரர் குறித்து பற்பல குறிப்புகளை அளித்துதவிய சரித்திரப் புதின எழுத்தாளர் திரு.விஷ்வக்சேனன் அவர்களுக்கும்,
நமக்குப் பலவகையிலும் உதவி புரிந்த, நம்முடன் பணிபுரியும் திரு.காளிதாஸ் அவர்களுக்கும், நமது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
உத்தராபதம் எனப்பட்ட பாரதவர்ஷத்தின் வடபகுதியில், கி.பி. 998முதல் 1030 வரை கோலோச்சி, தனது ஆட்சிக்காலத்தில் நாற்றிசையிலும் தனது வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு, தனது வஜ்ர சரீரத்தில் எழுபத்து இரண்டு விழுப்புண்கள் தாங்கிய மன்னவருடனும்,
பூர்வதேசம் என்றழைக்கப்பட்ட பாரதவர்ஷத்தின் கிழக்குப்பகுதியில் இருந்த பால சாம்ராஜ்யத்தை இரண்டாம் முறை நிறுவியவர் என்று வரலாற்றாசிரியர்களால் புகழப்பட்டவருடனும்,
சுவர்ணபூமியில் பெரும் வலிமை கொண்டு, வணிக சாம்ராஜ்யமாகத் திகழ்ந்த ஸ்ரீவிஜயத்துடனும் பொருதிய, ராஜேந்திரசோழர் குறித்து இயல்பான நடையில் இயற்றப்பட்டுள்ள, நமது முதல் முயற்சியான இப்புதினத்தில் வாசக அன்பர்கள், குறையேதும் காணின் மனம் பொறுத்து அருளுமாறும்,
உலகெங்கும் தமிழர்களின் வீரத்தைப் பறைசாற்றிய ராஜேந்திரரின் மெய்க்கீர்த்தியில் கூறப்பட்டுள்ள நாடுகளின் அமைவிற்கேற்ப, நீண்டதொரு பயணத்திற்குத் தயாராகும் வாசக அன்பர்கள் தங்களது கற்பனைப் புரவியில் ஆரோகணித்து, கி.பி.1021ம் ஆண்டின் கோடைகாலத்தை அடையுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
இது கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களால் கல்கி இதழில் தொடராக எழுதி வெளியான புகழ் பெற்ற வரலாற்றுப் புதினமாகும். இது பின்னர் நூலாக வெளிவந்தது. இச்சரித்திரக் கதையில் பார்த்திபன்…
கடல் புறா எழுத்தாளர் சாண்டில்யன் அவர்களால் எழுதப்பட்ட ஒரு வரலாற்றுப் புதினம். சிறீ விசய நாட்டில் இருந்து சோழர் உதவி தேடி இளவரசருக்கும் அவரது மகளுக்கும் சோழ இளவரசரான அந…
மோகினித்தீவு தமிழில் பிரபலமான புதினங்களை எழுதிய கல்கி கிருஷ்ணமூர்த்தி அவர்களினால் எழுதப்பட்ட ஒரு குறு நாவலாகும். திரைப்படக் கொட்டகையில் ஆங்கிலத் திரைப்படத்தைப் பார்த்து …
அமரர் கல்கி எழுதிய அற்புத வரலாற்றுப் புதினம் ‘சிவகாமியின் சபதம்’. பல்லவ சாம்ராஜ்யத்தினை நம் கண் முன்னே நிறுத்தும் அதிஅற்புத காவியம் இது. முதலாம் மகேந்திரவர்ம பல்லவன் அரசா…
"வந்தியத்தேவன் வாள்" சோழ நாட்டின் உயர்வுக்காக பல போர்க்களங்களில் பெரும் பங்கு பெற்றிருக்கிறது. அந்த வாள் சூரிய ரச்மியைப் பிரதிபலித்து மின்னும். சந்திரன் ஒளியிலே தன் போர்க் கு…
வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளிவந்த 'கள்வனின் காதலி' திரைப்படம் இந்நாவலை தழுவி எடுக்கப்பட்டது.
'கள்வனின் காதலி' அமரர் கல்கி எழுதிய தமிழ் புதினமாகும். இது ஒரே …
வெண்ணிற இரவுகள்பெண்கள் விஷயத்தில் நான் கொஞ்சம் சங்கோஜம் உடையவன் தான்.படபடவென்றுதான் இருக்கிறது.மறுக்க மாட்டேன்.ஒரு நிமிடத்திற்கு முன் அந்த ஆண் உன்னை பயமுறுத்தியபோது நீ எவ்வா…
பொன்னியின் செல்வன் கதையில் ஆதித்த கரிகாலன் கொலையுண்ட விவரம் இருக்குமே தவிர, கொலை செய்தது யார் என்று குறிப்பிடப் பட்டிருக்காது. படிப்போர் ஒரு மாதிரி 'கொலை செய்தது பாண்ட…
'கிடை' காட்டும் சமூக உறவுகள் மிகவும் இறுக்கமானவை. சாதி வேறுபாடும் பொருளாதார ஏற்றத்தாழ்வும் இங்கு இறுகிப் பிணைந்து கிடைக்கின்றன. எல்லப்பனின் கலியாண ஊர்வலமும் செவனியின் …
அம்பாளின் பல நாமங்களில் அபிதகுசாம்பாளுக்கு நேர்த்தமிழ் ‘உண்ணாமலையம்மன்’.
இட்டு அழைக்கும் வழக்கில் பெயர் அபிதாவாய்க் குறுகிய பின், அபிதா = உண்ணா. இந்தப் பதம் தரும் பொர…
சோலைமலை இளவரசி, கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புதினமாகும். இது ஒரேயொரு பாகமும் 20 அத்தியாயங்களையும் உடைய ஒரு சிறிய புதினமாகும். இக்கதையானது இருவேறு காலகட்டங்களி…